உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரி அருகே கட்டிட மேஸ்திரி மாயம்
கிருஷ்ணகிரி அருகே கட்டிட மேஸ்திரி மாயமானதால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகே போதிநாயனப்பள்ளி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 33). கட்டிட மேஸ்திரி.
இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற அண்ணாமலை அதன்பின்னர் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி தீபா, கணவரை பல இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் காணவில்லை.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மகராஜகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.