உள்ளூர் செய்திகள்
.

மத்தூர் அருகே மணல் திருட முயன்ற 3 பேர் மீது வழக்கு

Published On 2022-02-09 15:30 IST   |   Update On 2022-02-09 15:30:00 IST
மத்தூர் அருகே மணல் கடத்த முயன்ற 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளார்.
மத்தூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள நடுபட்டு ஆற்று பகுதியில் அரசு அனுமதியின்றி மணல் கடத்துவதாக மத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்று பார்த்த போது கருங்கல் நகர் பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது 36), அதே பகுதியை சேர்ந்த குமார் (48), பிரபு (43) ஆகிய 3 பேரும் 4 யூனிட் மணலை ஆற்று பகுதியில் குவித்து வைத்து கடத்த முயற்சி செய்துள்ள்ளனர்.

இதில் பிரபு, குமார் இருவரும் தலைமறைவாகி விட்டனர்.  ரமேசை போலீசார் கைது செய்து ஒசூர் சிறையில் அடைத்தனர்.

Similar News