உள்ளூர் செய்திகள்
போச்சம்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியானார்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள கோணனூர் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 75). இவர் வீட்டில் இருந்து அப்பகுதியில் உள்ள மளிகை கடைக்கு நேற்று மளிகை பொருட்கள் வாங்க சென்றார். அப்போது வீரமலை பகுதியில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் முதியவர் சின்னசாமி மீது மோதியது.
இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சை காக சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகி ச்சைகாக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சின்னசாமி இன்று அதிகாலை இறந்தார். இது குறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.