உள்ளூர் செய்திகள்
.

தூக்குபோட்டு முதியவர் தற்கொலை

Published On 2022-02-08 16:40 IST   |   Update On 2022-02-08 16:40:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே மது போதைக்கு அடிமையான முதியவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சூளகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம், - சூளகிரி தாலுகா உத்தனப்பள்ளி தாலுகா தானப்பட்டியை சேர்ந்தவர் நாராயணன் (வயது70). 

இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகன் மகள்கள் உள்ளன. மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். 

இந்த நிலையில் குடிபோதைக்கு அடிமையாகிய நாராயணன் சின்னார் அருகே பெடர் பள்ளி வனப்பகுதியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இது குறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தூக்கில் பிணமாக கிடந்த நாராயணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News