உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில் 2 வீடுகளில் நகை, பணத்தை திருடிய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரை அடுத்துள்ள பெரியசோகிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வி. அதே பகுதியை சேர்ந்த தமிழரசி. இவர்கள் இருவரும் நேற்று வீட்டை பூட்டி விட்டு விவசாய வேலைக்கு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் மாலையில் செல்வி வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது அங்கு பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகை, 50 ஆயிரம் பணம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது.
இதையடுத்து தமிழரசியின் வீடும் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அவர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது அங்கு வைத்திருந்த 2 கிராம் தங்கம் மற்றும் 30 ஆயிரம் பணம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது. இதனை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த மத்தூர் போலீஸ் இன்ஸ் பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது அடுத்தடுத்து 2 வீடுகளில் மர்ம நபர்கள் பட்டபகலில் கைவரிசை காட்டி இருப்பது தெரியவந்தது. அடுத்தடுத்து வீடுகளின் பூட்டை உடைத்து திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். தொடர்ந்து அருகில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.