உள்ளூர் செய்திகள்
பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய 3 பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே புக்க சாகரத்தில் ஒரு பெட்ரோல் பங்க் உள்ளது. இந்த பங்கில் இட்டப்பள்ளி குட்டாவை சேர்ந்தவர் முரளி (வயது25) என்ற ஊழியர், கடந்த 5-&ந்தேதி பணியில் இருந்தார். அப்போது, புன்னாகரத்தை சேர்ந்த திம்மராஜ் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் வந்து, பெட்ரோலை கடனாக வாங்கிச் சென்றனர்.
மறுநாள்(6-ந்தேதி), கடனை முரளி திருப்பி கேட்டபோது, பணம் தர மறுத்தும், தகராறு செய்தும் முரளியை அவர் கள் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த முரளி, ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து அவர் பேரிகை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில், திம்மராஜ் மற்றும் பாபு, சிவப்பிரகாஷ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.