உள்ளூர் செய்திகள்
காஞ்சீபுரம் போலீசில் 54 துப்பாக்கிகள் ஒப்படைப்பு

காஞ்சீபுரம் போலீசில் 54 துப்பாக்கிகள் ஒப்படைப்பு

Published On 2022-02-07 15:26 IST   |   Update On 2022-02-07 15:26:00 IST
நகர்ப்புற தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் துப்பாக்கி பெற்றுள்ள 54 பேரும் போலீசாரிடம் துப்பாக்கிகளை ஒப்படைத்துள்ளனர்.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் தங்களுடைய பாதுகாப்பு கருதி மாவட்ட கலெக்டர் அனுமதி பெற்று துப்பாக்கிகள் வாங்கி வைத்துள்ளனர். அவ்வாறு உரிமம் பெற்று 54 பேர் துப்பாக்கி வாங்கி வைத்துள்ளதாக கணக்கெடுக்கப்பட்டு உள்ளது.

அவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை துப்பாக்கி வைத்திருப்பதற்கான உரிமத்தை புதுப்பிக்க வேண்டும். தற்போது நகர்ப்புற தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் துப்பாக்கி பெற்றுள்ள 54 பேரும் போலீசாரிடம் துப்பாக்கிகளை ஒப்படைத்துள்ளனர்.

தேர்தல் முடிந்து நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்டது அவர்களுக்கு மீண்டும் துப்பாக்கி வழங்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News