உள்ளூர் செய்திகள்
பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது
கிருஷ்ணகிரி அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் நேற்று இரவு தர்கா பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சீட்டாடிய சிலர், போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றனர்.
உடனே போலீசார் சுதாரித்து கொண்டு அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். இதில் அவர்கள் கிருஷ்ணகிரி திருமலை நகரை சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 50), லட்சுமணன், முகேஷ்ராஜ், பையனப்பள்ளியை சேர்ந்த சங்கர் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து ரூ.6460 ரொக்க பணம் மற்றும் 4 மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.