உள்ளூர் செய்திகள்
குடும்ப தகராறில் தீக்குளித்த பெண் சாவு
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே குடும்ப தகராறில் தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே குடும்ப தகராறில் மண்எண்ணையை ஊற்றி உடலில் தீ வைத்த மகேஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மத்தூர் அருகே குள்ளப்பட்டி ஊராட்சிக் குட்பட்ட கோடியூர் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி. இவர் டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரது மனைவி மகேஸ் (வயது32). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் கணவன்&மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று மீண்டும் இருவருக்கும் குடும்ப தகராறு நடந்தது.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட மகேஸ் நேற்று வீட்டில் மண்எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். பின்னர் தீக்காயம் அடைந்த அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகேஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து மத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.