உள்ளூர் செய்திகள்
.

வீட்டுக்குள் புகுந்து கத்திமுனையில் நகை, பணம், செல்போன்கள் கொள்ளை

Published On 2022-02-06 12:05 IST   |   Update On 2022-02-06 12:05:00 IST
ஓசூரில் வீட்டுக்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி நகை, பணம், செல்போன் போன்றவற்றை கொள்ளை அடித்து சென்ற 3 நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஓசூர்:

ஓசூரில் நல்லூர் சாலையில் தனியார் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் சிவசங்கர். இவரது மனைவி ஸ்ரீதேவி. இவர்களது மகன் வேணு என்பவர் நாய்களை வளர்த்து விற்பனை தொழில் செய்து வருகிறார்.

இந்த நிலையில், நேற்று அவர்களின் வீட்டுக்கு 30 வயது மதிக்கத்தக்க 3 வாலிபர்கள் காரில் வந்து, நாய்க்குட்டிகளை வாங்க வந்துள்ளதாக கூறினர். இதையடுத்து, ஸ்ரீதேவி உள்ளே இருந்த மகனை அழைத்தார்.

அப்போது,   திடீரென மர்ம நபர்கள் 3 பேரும் வீட்டுக்குள் புகுந்து கத்திமுனையில் தாய்-மகனை மிரட்டி உள்ளே பீரோவில் இருந்த ஐந்தரை சவரன் தங்க நகைகள், ரொக்கப்பணம் ரூ.1 லட்சம் மற்றும் விலையுயர்ந்த 3 செல்போன்களை கொள்ளை படித்து அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.  இவற்றின் மொத்த மதிப்பு ரூ.1,96,500 ஆகும். 

இது குறித்து ஸ்ரீதேவி ஓசூர் அட்கோ போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். 

மேலும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து 4 தடயங்களை கைப்பற்றி சென்றனர். 

இச்சம்பவம் ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News