உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

Published On 2022-02-06 12:03 IST   |   Update On 2022-02-06 12:03:00 IST
சிறுமியை திருமணம் செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
அரியலூர் :

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கோரியம்பட்டி நடுபட்டியை சேர்ந்தவர் சரவணன் (வயது 25).   இவர்   17 வயது சிறுமியை காதலித்துள்ளார். இது சிறுமியின்  தாயார் விஜயலட்சுமிக்கு தெரிந்ததையடுத்து சிறுமியை கண்டித்துள்ளார்.

ஆனால் இருவரும் காதலை தொடர்ந்துள்ளனர்.  இது குறித்து இருவீட்டாரும் பேசி இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இந்நிலையில் சிறுமி கர்ப்பம் அடைந்த நிலையில் பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு வந்த  போது சிறுமி குழந்தை திருமணம் செய்திருப்பது தெரியவந்தது.

 இதுகுறித்து  அரியலூர் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கார்த்திகேயனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்ட கார்த்திக்கேயன் இதுகுறித்து ஜெயங்கொண்டம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் குழந்தைதிருமணத்திற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாயார் விஜயலட்சுமி,  சரவணன் தந்தை சந்திரன், தாயார்  தேவிகா ஆகியோர் மீது  போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்

Similar News