உள்ளூர் செய்திகள்
தேர்தல் பார்வையாளர் ஆய்வு செய்த காட்சி.

அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில் தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்

Published On 2022-02-06 06:27 GMT   |   Update On 2022-02-06 06:27 GMT
தேர்தல் பணிகளை கண்காணித்திட தேர்தல் பார்வையாளர்களை நியமித்துள்ளனர்.
அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி  தேர்தல்  பணிகளை பார்வையிட  பூங்கொடி  நியமனம் செய்யப்பட்டதை தொடர்ந்து அரியலூர் மாவட்டத்திற்கு கடந்த 3-ந்தேதி வருகைபுரிந்துள்ளார்.  

எனவே, அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் முறை கேடுகள் தொடர்பான புகார்களை தேர்தல் பார்வையாளருக்கு தெரிவிக்க 89253 55738 எனும் செல்லிட பேசியில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும், 4-ந்தேதி  அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய நகராட்சிகள் மற்றும் உடையார்பாளையம், வரத ராஜன்பேட்டை ஆகிய பேரூராட்சிகளில் வேட்பு மனுத்தாக்கல் மற்றும் தேர்தல் தொடர்பான பணிகளை மாவட்ட தேர்தல் பார்வையாளர் பூங்கொடி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகளை பார்வையிட சமூக நலம் மற்றும்  மகளிர் உரிமைத்துறை இயக்குநர் ரத்னா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி  தேர்தல் நடத்தை விதி முறைகள் மீறல்  மற்றும்  புகார்கள் குறித்து தேர்தல் பார்வையாளரின் 81228 10097 என்ற அலைபேசி எண்ணிற்கு  தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News