உள்ளூர் செய்திகள்
திருட்டு

ஓசூர் அருகே சரக்கு வாகனம் திருட்டு

Published On 2022-02-04 19:39 IST   |   Update On 2022-02-04 19:39:00 IST
ஓசூர் அருகே சரக்கு வாகனம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:

 ஓசூர் ஜூஜூவாடி எஸ்.எல்.வி. நகரை சேர்ந்தவர் பாபு (வயது 46). இவர் சொந்தமாக கிரேன் மற்றும் சரக்கு வாகனங்கள் வைத்துள்ளார். சம்பவத்தன்று இவர் தனது வீட்டின் முன்பு சரக்கு வாகனத்தை நிறுத்தி இருந்தார். மறுநாள் காலை எழுந்து பார்த்த போது வாகனத்தை காணவில்லை. அதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும். இது குறித்து பாபு சிப்காட் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News