உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 5 பவுன் நகை அபேஸ்

Published On 2022-02-03 15:26 IST   |   Update On 2022-02-03 15:26:00 IST
பெருந்துறை அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 5 பவுன் நகை அபேஸ் செய்து தப்பி ஓடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பெருந்துறை:

பெருந்துறை அருகே  வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 5 பவுன் நகை அபேஸ் செய்து தப்பி ஓடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பெருந்துறை அடுத்துள்ள சரளை இச்சிகாட்டு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் நாச்சிமுத்து. இவரது மனைவி சரஸ்வதி (53). கணவன், மனைவி இருவரும் விவசாயம் செய்து வருகின்றனர்.
 
இந்நிலையில் சம்பவத்தன்று  காலை 8 மணி அளவில் நாச்சிமுத்து தோட்டத்தில் ஆடு, மாடு மேய்க்க சென்றுவிட்டார். வீட்டில் சரஸ்வதி மற்றும் தனியாக இருந்துள்ளார். 

அப்போது அங்கு மோட்டார்சைக்கிளில்  வந்த 2 நபர்களில் ஒருவன் பைக்கிலேயே அமர்ந்து கொள்ள, மற்றொருவன் சரஸ்வதியிடம் இந்த பகுதியில் முருகேசன் வீடு எங்கு உள்ளது என கேட்டுள்ளார்.
 
பின்னர் குடிப்பதற்கு தண்ணீர் வேண்டும் என கேட்டுள்ளார். 

அதற்குள்ள சரஸ்வதி கதவை சாத்தி விட்டு உள்ளே செல்ல முயன்றபோது கதவை தள்ளிவிட்டு சரஸ்வதியின் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க நகையை பிடுங்கி கொண்டு மின்னல் வேகத்தில் மோட்டார்சைக்கிளில் ஏறி 2 பேரும் தப்பி விட்டனர். 

உடனே சரஸ்வதி திருடன்... திருடன்.. என சத்தம் போட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர். அதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். 

பின்னர் சரஸ்வதி இது குறித்து பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய மர்மநபர்களை வலை வீசி தேடிவருகின்றனர்.

Similar News