உள்ளூர் செய்திகள்
பஸ் நிலையத்தில் பெண்ணிடம் பணம், செல்போன் திருட்டு
ஆரணி அருகே பஸ் நிலையத்தில் பெண்ணிடம் பணம், செல்போன் திருடபட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆரணி:
ஆரணி டவுன் புதிய பஸ் நிலையத்தில் நேற்று மாலை நேரத்தில் அனைத்து பள்ளிகள் முடிவடைந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பஸ் நிலையத்துக்கு வந்தனர்.
மேலும் ஆரணி கூடலூர் செல்லும் அரசு பஸ்சில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பயணிகள் முந்தியடித்து கொண்டு ஏற முயன்றனர்.
இந்நிலையில் ஆரணி அருகே பாலப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சந்திரா (வயது 58) என்பவர் தன்னுடைய பையை கையில் வைத்து பஸ்சில் ஏற முயன்றார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர்கள் சந்திராவின் பையில் இருந்த ரூ.5 ஆயிரம் பணம் மற்றும் செல்போனை திருடினர்.
இதனை கண்ட அந்த பெண் கூச்சலிட்டுள்ளார். உடனடியாக அரசு பஸ் டிரைவர் பஸ்சை ஆரணி டவுன் போலீஸ் நிலையத்திற்கு பஸ்சை ஓட்டி சென்றார்.
போலீசார் பஸ்சை சோதனை செய்தனர். ஆனால் பணம் மற்றும் செல்போன் கிடைக்கவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.