உள்ளூர் செய்திகள்
.

சூளகிரியில் வாட்டர் டேங்க் ஆபரேட்டரை அடித்து கொன்ற கும்பல்

Published On 2022-02-02 13:34 IST   |   Update On 2022-02-02 13:34:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் வாட்டர் டேங்க் ஆப்ரேட்டரை அடித்துக்கொன்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அண்ணா நகரை சேர்ந்தவர் முத்தப்பன் (வயது 55). தண்ணீர் டேங்க் ஆபரேட்டர் ஆவார். இவரது சொந்த ஊர் போகிபுரம் ஆகும். அண்ணா நகரில் முத்தப்பனின் மகன் முரளி, மருமகள் சுமித்ரா வசித்து வருகிறார்கள். வீட்டின் தரைத்தளத்தில் அவர்கள் வசிக்கிறார்கள். முதல் தளத்தில் முத்தப்பன் தங்கி செல்வது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று மாலை முத்தப்பன் தங்கி தள அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் மருமகள் சுமித்ரா அங்கு சென்று பார்த்தார். அப்போது அறையில் தரையில் இறந்த நிலையில் முத்தப்பன் கிடந்தார். அவரை சுற்றி ரத்தமாக காணப்பட்டது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து சூளகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன் பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அப்போது முத்தப்பன் பின்புற தலையில் காயத்துடன் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். அவரை மர்ம நபர்கள் யாரோ பின் தலையில் தாக்கி கொலை செய் துள்ளனர். அவர் இறந்து 2 நாட்கள் இருக்கும் என்பதால் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.

இதையடுத்து போலீசார் முத்தப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரை யார் கொலை செய்தார்கள் என சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் சூளகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News