உள்ளூர் செய்திகள்
ஓசூர் அருகே வாகனம் மோதி விவசாயி சாவு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே வாகனம் மோதியதில் விவசாயி பலியானார்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கோனேரிப் பள்ளியை சேர்ந்தவர் பார்த்தசாரதி (வயது 33), விவசாயி.
சம்பவத்தன்று, ஸ்கூட்டரில் அவர் ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். வழியில், பேரண்டப்பள்ளி காட்டுப்பகுதி அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், ஸ்கூட்டர் மீது வேகமாக மோதியது.
இதில், பார்த்தசாரதி தலையில் பலத்த காயம் அடைந்து சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.