உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரியில் கொரோனாவுக்கு பெண் பலி
கிருஷ்ணகிரியில் கொரோனா நோய் தொற்றுக்கு பெண் பலியானார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 57 வயது பெண் கொரோனா பாதிப்புடன் வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதற்கிடையே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 489 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 698 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர்.
இதுவரை மாவட்டத்தில் 57 ஆயிரத்து 790 கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 51 ஆயிரத்து 476 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். தற்போது 5 ஆயிரத்து 946 பேர் சிகிச்சையில் உள்ளன. இதுவரை சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 368 ஆக உள்ளது.