உள்ளூர் செய்திகள்
.

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2022-02-02 13:18 IST   |   Update On 2022-02-02 13:18:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஓசூர்:

கிருஷ்ணகிரி துவார காபுரியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 28). இவர் ஓசூரில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இதை தனது பெற்றோருக்கு தெரிவித்தார். இவரது காதலை பெற்றோர் ஏற்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பாலாஜி, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News