உள்ளூர் செய்திகள்
கடலூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: உற்சாகத்துடன் வகுப்புகளுக்கு வந்த மாணவ-மாணவிகள்
கடலூர் மாவட்டத்தில் 2,200 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இயங்கி வருகிறது. அரசு உத்தரவுப்படி இன்று பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டது. இதையொட்டி மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர்.
கடலூர்:
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று ஓரளவு குறைந்து வருகிறது. எனவே வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டது. அதோடு இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு அடைப்பும் ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து வழக்கம் போல் கடைகள் மற்றும் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டது.
அதோடு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்த பள்ளி, கல்லூரிகள் இன்று (1-ந் தேதி) முதல் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளை திறக்க ஏற்பாடு நடந்தது.
முன்னதாக கடலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தற்போது முன்னெச்சரிக்கை பணிகளில் பள்ளி நிர்வாகம் ஈடுபட்டனர். ஏதேனும் கட்டிடம் பழுது, அமரும் நாற்காலி சீர் செய்தல் மற்றும் அடிப்படை வசதிகளை செய்தனர்.
இது மட்டுமன்றி பள்ளி வளாகத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள், கழிப்பறைகள் சுத்தம் செய்யும் பணிகள் நடந்தது.
கடலூர் மாவட்டத்தில் 2,200 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இயங்கி வருகிறது. அரசு உத்தரவுப்படி இன்று பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டது. இதையொட்டி மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர்.
பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகளுக்கு கைகளில் சானிடைசர் தெளிக்கப்பட்டது. மாணவ-மாணவிகளை தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். வகுப்புகளில் சமூக இடைவெளியுடன் அமர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது. அதன்படி மாணவ-மாணவிகள் சமூக இடைவெளியுடன் வகுப்புகளில் அமர்ந்து இருந்தனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று ஓரளவு குறைந்து வருகிறது. எனவே வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டது. அதோடு இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு அடைப்பும் ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து வழக்கம் போல் கடைகள் மற்றும் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டது.
அதோடு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்த பள்ளி, கல்லூரிகள் இன்று (1-ந் தேதி) முதல் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளை திறக்க ஏற்பாடு நடந்தது.
முன்னதாக கடலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தற்போது முன்னெச்சரிக்கை பணிகளில் பள்ளி நிர்வாகம் ஈடுபட்டனர். ஏதேனும் கட்டிடம் பழுது, அமரும் நாற்காலி சீர் செய்தல் மற்றும் அடிப்படை வசதிகளை செய்தனர்.
இது மட்டுமன்றி பள்ளி வளாகத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள், கழிப்பறைகள் சுத்தம் செய்யும் பணிகள் நடந்தது.
கடலூர் மாவட்டத்தில் 2,200 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இயங்கி வருகிறது. அரசு உத்தரவுப்படி இன்று பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டது. இதையொட்டி மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர்.
பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகளுக்கு கைகளில் சானிடைசர் தெளிக்கப்பட்டது. மாணவ-மாணவிகளை தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். வகுப்புகளில் சமூக இடைவெளியுடன் அமர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது. அதன்படி மாணவ-மாணவிகள் சமூக இடைவெளியுடன் வகுப்புகளில் அமர்ந்து இருந்தனர்.