உள்ளூர் செய்திகள்
ஆர்ப்பாட்டம் செய்தவர்களை படத்தில் காணலாம்.

செல்போன் டவர் அமைக்க கோரி ஆர்ப்பாட்டம்

Published On 2022-02-01 15:20 IST   |   Update On 2022-02-01 15:20:00 IST
கிருஷ்ணகிரி மாவட்ட சூளகிரி அருகே செல்போன் டவர் அமைக்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சூளகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாசில்தார் அலுவலக முன்பு செல்போன் டவர் அமைக்க கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்  நடந்தது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் - சூளகிரி தாலுகா காளிங்காவரம் ஊராட்சி பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் செல்போன் டவர் அமைக்க கோரி  சமூக நீதி உரிமைகள் பாதுகாப்பு கவுன்சில் சார்பில் சூளகிரி தாசில்தார் அலுவலகம் முன்பு கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.  

இதில் மாநிலத் தலைவர் சாமி தலைமையில் மாநில ஒருங்கிணைப்பாளர் பிரபாகர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News