உள்ளூர் செய்திகள்
.

மோட்டார் சைக்கிள், பாலத்தில் மோதி வாலிபர் சாவு

Published On 2022-02-01 13:47 IST   |   Update On 2022-02-01 13:47:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பாலத்தில் மோட்டார் சைக்கிளில் மோதியதில் வாலிபர் பலியானார்.
மத்தூர்:

கள்ளகுறிச்சி மாவட்டம் குலத்து மேட்டு தெருவை சேர்ந்தவர் செழியன் (வயது 23). இவர் பெங்களுரு செல்ல குலத்துமேட்டு தெருவில் இருந்து நேற்று இரவு இரு சக்கர வாகனத்தில்  கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள பாம்பாறு அணை அருகே வந்த போது இரவு என்பதால் பாலத்தின் மீது மோதி பாலத்தின் அடியில் விழுந்து பலத்த காயமடைந்துள்ளார்.

இது குறித்து அக்கம் பக்கத்தினர் ஊத்தங்கரை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் போலீஸார் விரைந்து சென்று படுகாயமடைந்த செழியனை மீட்டு ஆம்பலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் போகும் வழியிலே செழியன் பரிதாபமாக இறந்து விடுகின்றார். இது குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.

Similar News