உள்ளூர் செய்திகள்
.

மோட்டார்சைக்கிள் மோதி பெண் பலி

Published On 2022-02-01 13:08 IST   |   Update On 2022-02-01 13:08:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெண் பரிதாபமாக இறந்தார்.
வேப்பனப்பள்ளி:

கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா அருகே உள்ள காமசந்திரம் பக்கமுள்ளது கீர்மந்தா கிராமம். இந்த ஊரை சேர்ந்தவர் ராமக்காள் (வயது 60).

வேப்பனப்பள்ளி பகுதிக்கு வந்திருந்த அவர் வேப்பனப்பள்ளி & பேரிகை சாலையில் பூதிமுட்லு அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் அவர் மீது மோதினார். இதில் பலத்த காயம் அடைந்த ராமக் காளை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ராமக்காள் இறந்தார். இந்த விபத்து குறித்து வேப்பனப்பள்ளி போலீசார் விசாரணை நடத்திவருகிறார்கள்

Similar News