உள்ளூர் செய்திகள்
ஹோட்டல் உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை
திட்டக்குடி அருகே ஹோட்டல் உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திட்டக்குடி:
திட்டக்குடி அடுத்த ராமநத்தம் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரம் சர்வீஸ் ரோட்டில் நியூ அச்சம்மா என்ற ஹோட்டல் கடை நடத்திவரும் டி.ஏந்தல் அருகே உள்ள கொரக்கை நத்தம் பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகன் மணிகண்டன் (40 )என்பவர் கடையின் மேலே உள்ள ரூமில் இருந்து வருகிறார்.
இவரது கடையில் வேலை பார்க்கும் நபர் இன்று காலை மேலே உள்ள ரூமுக்கு சென்று பார்த்தபோது ரூம்பில் தூக்கு மாட்டி இறந்து நிலையில் உள்ளார். இது குறித்து ராமநத்தம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலையா தற்கொலையா விசாரணை மேற்கொண்டுள்ளனர்.