உள்ளூர் செய்திகள்
கால்பந்தாட்ட வீரர்களுக்கு பாராட்டு விழா
கால்பந்தாட்ட வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
சீர்காழி:
சீர்காழியில் செயல்பட்டு வரும் பால்கன்ஸ் விளையாட்டு அகாடமி சார்பில் கால்பந்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் அண்மையில் நடந்து முடிந்த மினி புட்பால் தென் இந்திய அளவிளான போட்டியில் தமிழக அணி முதலிடம் வென்றது. வெற்றி பெற்ற தமிழக அணியில் பால்கன்ஸ் அணி வீரர்கள் முகமது பர்வஜ், பாலாஜி, ராமநாதன், விக்ரம் ஆகிய வீரர்கள் தங்கபதக்கம் வென்றனர்.
இதனிடையே தங்கபதக்கம் வென்ற வீரர்களையும், இவர்களுக்கு பயிற்சி அளித்த பயிற்றுனர்கள் ர.அமுது, அரவிந்த், பு. சுபாஷ் குமார், வீ.இளவரசன் ஆகியோரை ச.மு.இ மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.அறிவுடை நம்பி, உடற் கல்வி இயக்குநர் எஸ்.முரளிதரன், உடற் கல்வி ஆசிரியர்கள் மார்கண்டன், முரளி, சக்திவேல், முன்னாள் விளையாட்டு வீரர்கள் ரத்தினவேல், இளையராஜா, விஜயமீனாட்சி, கமல்ராஜ், ஜே கே.செந்தில்குமார், வினோத், ரவிவர்மராஜ், கே.கபிலன், பி.மணிகன்டன், பா.ஸ்ரீராம் பிரசாத் ஆகியோர் பாராட்டினர்.
முன்னாள் கால்பந்தாட்ட வீரர்கள் ஆர்.குமரன் மற்றும் மோகன்தாஸ் உடனிருந்தனர். மயிலாடுதுறையை சார்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரான கார்த்தி (அமெரிக்காவில் வசிப்பவர்) பத்தாயிரம் மதிப்புள்ள 10 கால்பந்துகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை பால்கன்ஸ் அகாடமிக்கு வழங்கியுள்ளார்.