உள்ளூர் செய்திகள்
திருவண்ணாமலையில் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி
திருவண்ணாமலையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாலிபால் போட்டியில் தண்டராம்பட்டு அணி வெற்றி பெற்றது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி நடந்தது. விளையாட்டு போட்டியை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துவேல் மற்றும் மாவட்ட தடகள சங்க செயலாளர் புகழேந்தி, மாவட்ட கூடைப்பந்து சங்க செயலாளர் ரமேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
24 அணிகள் கலந்து கொண்ட போட்டியில் திருவண்ணாமலை அணியும், தண்டராம்பட்டு அணியும் இறுதி போட்டிக்கு தகுதிபெற்றன.
இதில் தண்டராம்பட்டு வாலிபால் அணி வெற்றி பெற்றது. திருவண்ணாமலை அணி இரண்டாம் இடம் பிடித்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு வாலிபால் சங்க துணைத்தலைவர் சீனிகார்த்திகேயன் பரிசு கோப்பையினை வழங்கினார்.