உள்ளூர் செய்திகள்
முற்றுகை

கடலூரில் அம்மா மினிகிளினிக் மருத்துவ பணியாளர்கள் முற்றுகை

Published On 2022-01-29 15:44 IST   |   Update On 2022-01-29 15:44:00 IST
கடலூர் மாவட்டத்தில் உள்ள அம்மா மினிகிளினிக்கில் பணியாற்றி வருகிறார்கள். இன்று காலை மருத்துவர்கள், மருத்துவபணியாளர்கள் கடலூர் கடற்கரை சாலையில் உள்ள மருத்தவதுறை இணை இயக்குனர் அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டனர்.

கடலூர்:

தமிழகம் முழுவதும் கடந்த அ.தி.மு.க. ஆட்சிகாலத்தில் அம்மா மினிகிளினிக் உருவாக்கப்பட்டது. இந்த கிளினிக்கில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள அம்மா மினிகிளினிக்கில் பணியாற்றி வருகிறார்கள். இன்று காலை மருத்துவர்கள், மருத்துவபணியாளர்கள் கடலூர் கடற்கரை சாலையில் உள்ள மருத்தவதுறை இணை இயக்குனர் அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டனர்.

அப்போது அவர்கள் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு அம்மா மினிகிளினிக்கில் பல்நோக்கு மருத்துவமனை பணியாளராக கடந்த 1 வருடமாக பணியாற்றி வருகிறோம். கொரோனா வைரஸ் தொற்று பிரிவிலும், தடுப்பூசி முகாம்களிலும், காய்ச்சல் முகாம்களிலும் பணிபுரிந்து வந்த நிலையில், எந்தவித முன் அறிவிப்பும் இன்றி எங்களை பணி நீக்கம் செய்வதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

Similar News