உள்ளூர் செய்திகள்
தற்கொலை

திருமணம் செய்து வைக்காததால் வாலிபர் தற்கொலை

Published On 2022-01-28 18:39 IST   |   Update On 2022-01-28 18:39:00 IST
பெண்ணாடத்தில் திருமணம் செய்து வைக்காததால் விரக்திட்யில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்ணாடம்:

பெண்ணாடம் அருகே உள்ள மாளிகைகோட்டம் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜகோபால் மகன் வினோத்குமார்(வயது 25). இவர், தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு குடும்பத்தினரிடம் கேட்டுள்ளார். அதற்கு உடன் பிறந்த சகோதர, சகோதரிகள் குடும்ப சூழலை காரணம் காட்டி வந்தனர். 

இதில் மனமுடைந்த வினோத்குமார், வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். மயங்கி கிடந்த அவரை, உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 

அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வினோத்குமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகரின் பேரில் பெண்ணாடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News