உள்ளூர் செய்திகள்
கைது

கடலூரில் வியாபாரியிடம் வழிப்பறி செய்த வாலிபர் கைது

Published On 2022-01-28 18:37 IST   |   Update On 2022-01-28 18:37:00 IST
கடலூரில் நடந்து சென்ற வியாபாரியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:

கடலூர் கூத்தப்பாக்கம் சோமசுந்தரம் நகரை சேர்ந்தவர் சண்முகம் (வயது 42). வியாபாரி. இவர் நேற்று முன்தினம் கம்மியம்பேட்டை ஜே.ஜே.நகர் வழியாக நடந்து சென்றார்.

அப்போது அங்கு வந்த பாதிரிக்குப்பம் காந்திநகரை சேர்ந்த சங்கர் மகன் நாகராஜ் (21) என்பவர் அவரை வழிமறித்து, அவர் சட்டைப்பையில் இருந்த ரூ.500-யை வழிப்பறி செய்தார். 

இது பற்றி சண்முகம் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நாகராஜை கைது செய்தனர்.

Similar News