உள்ளூர் செய்திகள்
தருமபுர ஆதீனத்திடம் ஆசி பெற்ற பின்னணி பாடகர்
தருமபுர ஆதீனத்தின் முன்பு பின்னணி பாடகர் வேல்முருகன் பாடல் பாடி ஆசி பெற்றார்.
சீர்காழி:
சீர்காழி அடுத்த திருமுல்லைவாசல் கிராமத்தில் எழுந்தருள் பாலிக்கும் அணிகொண்ட கோதை அம்மன் உடனாகிய முல்லைவனநாதர் கோவில்
மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது முடிந்தது.
இவ்விழாவில் பங்கேற்பதற்காக திரைப்பட பின்னணி பாடகர் வேல்முருகன் வந்தார்.
கோவிலில் சாமி தரிசனம் செய்த பாடகர் வேல்முருகன், தருமபுரம் ஆதீனம்
27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த
பரமாச்சாரிய சுவாமிகள் சந்தித்து ஆசி பெற்றார்.
அப்போது தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் பக்தி பாடல்கள் சிலவற்றை பாடினார் வேல்முருகன்.
தொடர்ந்து தருமபுரம் ஆதீனம், பாடகரை பாராட்டி பிரசாதங்களை வழங்கினார்.
அப்போது கோவில் கண்காணிப்பாளர் செந்தில், அதிமுக இளைஞர்
மற்றும் இளம்பெண்கள் பாசறை ஒன்றிய செயலாளர் ஜி.வி.என்.சுரேஷ் அ.தி.மு.க.வை சேர்ந்த துரை, பட்டதாரி ஆசிரியர் கோவி. நடராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.