உள்ளூர் செய்திகள்
.

காவேரிப்பட்டணத்தில் வாகனம் மோதி முதியவர் பலி

Published On 2022-01-28 08:59 GMT   |   Update On 2022-01-28 08:59 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் வாகனம் மோதியதில் முதியவர் பலியானார்.
காவேரிப்பட்டணம்:

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே ஜெகதாப் பிரிவு ரோடு அருகே கடந்த 26ந் தேதி அதிகாலை 3 மணியளவில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. மேலும் விபத்தை ஏற்படுத்திய வாகனத்தையும் போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News