உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

மாவட்ட வேலைவாய்ப்பு மையம் திறப்பு

Published On 2022-01-27 10:13 GMT   |   Update On 2022-01-27 10:13 GMT
மயிலாடுதுறையில் புதிதாக மாவட்ட வேலைவாய்ப்பு மையம் திறப்பு விழா நடைபெற்றது.
தரங்கம்பாடி:

நாகை மாவட்டத்தில் இருந்து 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் 2020-ம் ஆண்டு பிரிக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நியமிக்கப்பட்டு மயிலாடுதுறை மாவட்டம் செயல்பட்டு வந்தாலும் பல்வேறு துறைகள் பிரிக்கப்படாமல் ஒருங்கிணைந்த நாகப்பட்டினம் மாவட்டத்தின் தலைமையில் இயங்கி வருகிறது.
 
தற்பொது ஒவ்வொரு துறையாக மயிலாடுதுறை மாவட்டத்தின் கட்டுப் பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் மயிலாடுதுறை மாவட்டத்திற்கான மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மயிலாடுதுறை பாலாஜி நகர் 2-வது தெருவில் தொடங்கப்பட்டது. 

மாவட்ட கலெக்டர் லலிதா தலைமையில் வாடகை கட்டிடத்தில் தொடங்கப்பட்ட மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தை சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
 
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், ராஜகுமார், திருச்சி மண்டல வேலைவாய்ப்பு இணை இயக்குநர் சந்திரன், நாகை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பிரகாசம் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலராக நியமிக்கப் பட்ட மா.பழனிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
மயிலாடுதுறையில் வேலைவாய்ப்பு அலுவலகம் திறக்கப் பட்டதால் மாணவர்கள் நாகை மாவட்டத்திற்கு செல்லாமல் மயிலாடுதுறையிலேயே வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பயன்பெற முடியும் என்பதால் அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Tags:    

Similar News