உள்ளூர் செய்திகள்
பாரூர் அருகே நிலத்தகராறில் இருதரப்பினர் மோதல்
கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் அருகே இருதரப்பினர் மோதலில் பெண் காயமடைந்தார். இதுகுறித்து 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூர் அடுத்துள்ள காவாபுதூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் கவிதா (வயது28). இவருக்கும், இவரது உறவினர்களுக்கு இடையே நிலப்பிரச்சினை இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று பழனி, மாது, கார்த்திக்கேயன், ஜெயா, சக்தி, ராஜேஸ்வரி ஆகியோர் சேர்ந்து கவிதாவை தகாத வார்த்தையால் திட்டி தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த கவிதாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு போச்சம்பள்ளி அரசு மருத்து வமனையில் சேர்த்தனர்.
இது குறித்து பாரூர் போலீசில் இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் பழனி, மாது, கார்த்திக்கேயன், ஜெயா, சக்தி, ராஜேஸ்வரி மற்றும் கவிதா 7 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.