உள்ளூர் செய்திகள்
கைது

விருத்தாசலம் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது

Published On 2022-01-26 16:28 IST   |   Update On 2022-01-26 16:28:00 IST
விருத்தாசலம் அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருத்தாசலம்:

கருவேப்பிலங்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் பாக்யராஜ் மற்றும் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆலிச்சிக்குடி கிராமத்தை சேர்ந்த செல்வமணி (வயது 25) என்பவர் தமிழக அரசால் தடை சய்யப்பட்ட கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்ததை பார்த்தனர். உடனே போலீசார் செல்வ மணியை கைது செய்தனர். அவரிடம் இருந்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News