உள்ளூர் செய்திகள்
இந்திய விளையாட்டு ஆணைய அரங்கத்தில் நடந்த குடியரசு தினவிழாவில் கலெக்டர் லலிதா தேசியகொடி ஏற்றினார்.

மயிலாடுதுறையில் 73-வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்

Published On 2022-01-26 15:38 IST   |   Update On 2022-01-26 15:38:00 IST
மயிலாடுதுறை ராஜன்தோட்டம் இந்திய விளையாட்டு ஆணைய அரங்கத்தில் நடந்த குடியரசு தினவிழாவில் கலெக்டர் லலிதா தேசியகொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
மயிலாடுதுறை:

மயிலாடுதுறையில் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 73-வது குடியரசு தினவிழாவில் மாவட்ட கலெக்டர் லலிதா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

பின்னர் சிறப்பாக பணியாற்றிய 19 காவல் ஆளுநர்களுக்கு தமிழக அரசின் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி கவுரவித்தார்.   

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் தலைமையில் நடைபெற்ற காவல் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். 

 நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Similar News