உள்ளூர் செய்திகள்
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

75 கோடி பெண்கள் இலவச பஸ் சேவையை பயன்படுத்தியுள்ளனர்

Published On 2022-01-26 15:13 IST   |   Update On 2022-01-26 15:13:00 IST
தமிழகத்தில் இதுவரை 75 கோடி பெண்கள் இலவச பஸ் சேவையை பயன்படுத்தியுள்ளனர் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
சீர்காழி:

சீர்காழியில் தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.க்கள் நிவேதா.முருகன், எம்.பன்னீர்செல்வம், ராஜகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், சீர்காழி கோட்டாட்சியர் நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்று ரூ.25லட்சத்து 34ஆயிரம் மதிப்பில் 290 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா, திருமண உதவித்தொகை, இறப்பு நிதியுதவி, புதிய மின்னனு குடும்ப அட்டை, வேளாண் இடுபொருட்கள் ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:

தேர்தலுக்கு முன்பே உங்கள்தொகுதியில் ஸ்டாலின் திட்டத்தில் லட்சக்கணக்கான மனுக்களை பெற்று, ஆட்சியமைத்து நூறுநாட்களுக்குள் மூன்றரை லட்சம் மனுக்களுக்கு தீர்வுகண்டவர் தமிழக முதல்வர். இதுவரையிலும் 75 கோடி பெண்கள் இலவச பஸ் சேவையை பயன்படுத்தியுள்ளனர். 

சீர்காழி அரசு மருத்துவமனை தனியார் மருத்துவமனைக்கு நிகராக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இங்கு டயாலிசீஸ் வசதிக்காக 4 டயாலிசீஸ் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.சிடி ஸ்கேன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ரூ.23 கோடியில் சீர்காழி பகுதியில் உயர் நவீன அறுவை சிகிச்சை வசதியுடன் மருத்துவமனை வரவுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Similar News