உள்ளூர் செய்திகள்
.

வாழப்பாடி அருகே தலைமை ஆசிரியையிடம் தங்கச்சங்கிலி பறிப்பு

Published On 2022-01-26 09:10 GMT   |   Update On 2022-01-26 09:10 GMT
வாழப்பாடிஅருகே தலைமை ஆசிரியை கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்கச்சங்கிலியை மர்மநபர்கள் பறித்துக்கொண்டு தலைமறைவாகினர்.
வாழப்பாடி:

வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சண்முகம். இவருடைய மனைவி சாந்தா (வயது 58). முடியனு£ர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

இன்று காலை  குடியரசு தினத்தையொட்டி கொடியேற்று விழா நடத்துவதற்காக பள்ளிக்கு செல்ல முத்தம்பட்டி கேட் பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த போது, இரு சக்கர வாகனத்தில் வந்த டிப்டாப் உடையணிந்த 2 மர்மநபர்கள், கத்தியைக்காட்டி மிரட்டி, தலைமையாசிரியை கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு தலைமறைவாகி விட்டனர்.

இச்சம்பவம் குறித்து வாழப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று பட்டப்பகலில் பஸ் நிறுத்தத்தில் பேருந்துக்கு காத்திருந்த அரசுப்பள்ளி தலைமையாசிரியையிடம் மர்ம நபர்கள் தங்கச்சங்கிலியை பறித்துச்சென்ற சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News