உள்ளூர் செய்திகள்
.

வாழப்பாடி அருகே தலைமை ஆசிரியையிடம் தங்கச்சங்கிலி பறிப்பு

Published On 2022-01-26 14:40 IST   |   Update On 2022-01-26 14:40:00 IST
வாழப்பாடிஅருகே தலைமை ஆசிரியை கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்கச்சங்கிலியை மர்மநபர்கள் பறித்துக்கொண்டு தலைமறைவாகினர்.
வாழப்பாடி:

வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சண்முகம். இவருடைய மனைவி சாந்தா (வயது 58). முடியனு£ர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

இன்று காலை  குடியரசு தினத்தையொட்டி கொடியேற்று விழா நடத்துவதற்காக பள்ளிக்கு செல்ல முத்தம்பட்டி கேட் பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த போது, இரு சக்கர வாகனத்தில் வந்த டிப்டாப் உடையணிந்த 2 மர்மநபர்கள், கத்தியைக்காட்டி மிரட்டி, தலைமையாசிரியை கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு தலைமறைவாகி விட்டனர்.

இச்சம்பவம் குறித்து வாழப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று பட்டப்பகலில் பஸ் நிறுத்தத்தில் பேருந்துக்கு காத்திருந்த அரசுப்பள்ளி தலைமையாசிரியையிடம் மர்ம நபர்கள் தங்கச்சங்கிலியை பறித்துச்சென்ற சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News