உள்ளூர் செய்திகள்
போலீசார் விசாரணை

சிதம்பரம் அருகே விவசாயி அடித்துக்கொலை?- போலீசார் விசாரணை

Published On 2022-01-25 17:15 IST   |   Update On 2022-01-25 17:15:00 IST
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே விவசாயி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அந்த பகுதி‌ மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேத்தியாத்தோப்பு:

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள வளையமாதேவி கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 46). விவசாயி.

இவர் இன்று காலை கத்தாழை ஊராட்சிக்குட்பட்ட கரிவெட்டி கிராமத்தில் உள்ள என்எல்சி ஏரிக்கரையில் பிணமாக கிடந்தார். இதை அந்த வழியே சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் இதுகுறித்து சேத்தியாதோப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இளையராஜ் தலைமையிலான போலீசார் பிணமாக கிடந்த வேல்முருகனின் உடலை பார்வையிட்டனர். அப்போது வேல்முருகனின் உடலின் பல்வேறு இடங்களில் காயங்கள் இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் வேல்முருகன் அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து விவசாயி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அந்த பகுதி‌ மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News