உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

ரெயில் தண்டவாளத்தில் போலீசார் சோதனை

Published On 2022-01-25 15:59 IST   |   Update On 2022-01-25 15:59:00 IST
மயிலாடுதுறையில் ரெயில் தண்டவாளத்தில் போலீசார் சோதனை நடத்தினர்.
சீர்காழி:

குடியரசு தினவிழா நாளை கொண்டாடப்படுகிறது. 

இந்த நிலையில் மயிலாடுதுறை பகுதியில் போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் உத்தரவுப்படி போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மயிலாடுதுறை ரெயில் தண்டவாளத்தில் கண்காணிப்பு பணி துரிதப்படுத்தப்பட்டு உள்ளது. 

தண்டவாளத்தில் பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று ஆய்வு நடத்தினர்.

வெடிகுண்டு உள்ளதா என்பது குறித்தும் நவீன கருவி மூலம் சோதனை செய்தனர்.தொடர்ந்து 2 நாட்கள் கண்காணிப்பு பணிகள் நடைபெறும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Similar News