உள்ளூர் செய்திகள்
தற்கொலை

ஸ்ரீமுஷ்ணம் அருகே தூக்குப்போட்டு மூதாட்டி தற்கொலை

Published On 2022-01-24 11:41 GMT   |   Update On 2022-01-24 11:41 GMT
ஸ்ரீமுஷ்ணம் அருகே தூக்குப்போட்டு மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:

ஸ்ரீமுஷ்ணம் அருகே ஏ.வள்ளியத்தை சேர்ந்தவர் கலியபெருமாள் மனைவி கல்யாணி (வயது 80). இவரை கவனித்து வந்த அவரது மகன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதாக தெரிகிறது. அதன்பிறகு அவரை யாரும் கவனிக்காமல் இருந்ததாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த கல்யாணி வீட்டு பின்புறம் இருந்த வாகை மரத்தில் தூக்குப்போட்டு கொண்டார். இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது பற்றி அவரது பேத்தி தில்லைநாயகி கருவேப்பிலங்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News