உள்ளூர் செய்திகள்
.

அண்ணன் உறவு முறை வாலிபருடன் காதல்: கிருஷ்ணகிரி இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2022-01-24 06:45 GMT   |   Update On 2022-01-24 06:45 GMT
கிருஷ்ணகிரி அருகே அண்ணன் உறவுமுறை வாலிபருடன் கொண்ட காதலால் மனமுடைந்த இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் கானமுட்லு அருகே பெரிய மோட்டூர் கிராமத்தை சேர்ந்த 16 வயதுடைய இளம்பெண், அண்ணன் உறவு முறையில் உள்ள ஒரு வாலிபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த அந்த பெண்ணின் உறவினர்கள், கண்டித்து பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் இளம்பெண் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அண்ணன் முறை வாலிபருடன் காதல் செய்த இளம்பெண், விரக்தியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News