உள்ளூர் செய்திகள்
அம்பிகா

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல் மனைவி உடல் நசுங்கி பலி கணவன் கண்முன்னே பரிதாபம்

Published On 2022-01-24 04:53 GMT   |   Update On 2022-01-24 04:53 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் கணவன் கண்முன்னே மனைவி பரிதாபமாக இறந்தார்.
மத்தூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே வேலாவள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வைத்திலிங்கம். இவரது மனைவி அம்பிகா (வயது 40).

இந்த நிலையில் நேற்று திருப்பத்தூரில் ஒரு நிகழ்ச்சிக்காக சென்று விட்டு கணவன்-மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ஒரு வளைவில் திரும்பிய போது பின்னால் மண்எண்ணை பாரம் ஏற்றி வந்த லாரி , மோட்டார் சைக்கிள் மீது மோதி யது. இதில் தூக்கி வீசப்பட்டு அம்பிகா சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக இறந் தார். அவரது கணவர் வைத்தி லிங்கம் படுகாயம் அடைந்தார்.

இந்தவிபத்து பற்றி தகவல் கிடைத்ததும் மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் பலியான அம்பிகா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வைத்திலிங்கம் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News