உள்ளூர் செய்திகள்
கைது

சிதம்பரம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது

Published On 2022-01-23 09:23 GMT   |   Update On 2022-01-23 09:23 GMT
சிதம்பரம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிதம்பரம்:

சிதம்பரம் அருகே உள்ள புவனகிரி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட தலைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சசி குமார் (வயது 45). சம்பவத்தன்று சசிகுமார் புவனகிரி அருகே உள்ள திரெளபதி அம்மன் கோவில் தெருவில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியே வந்த 2 மர்ம நபர்கள் சசி குமாரிடம் இருந்த 1000 ரூபாயை கொள்ளையடித்தனர். மேலும் அவர்கள் 2 பேரும் சசிகுமாரை ஆபாசமாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். தொடர்ந்து சசிகுமார் புவனகிரி போலீசில் புகார் செய்தார்.

புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் திரவுபதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த விக்னேஸ்வரன் (20), மேல் புவனகிரியை சேர்ந்த பாலாஜி (20) ஆகிய 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த 2 வாலிபர்களும் சசிகுமாரிடம் வழிப்பறியில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர்.இதனை தொடர்ந்து போலீசார் அவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Tags:    

Similar News