உள்ளூர் செய்திகள்
ஆரணி பஜாரில் கடைகள் அடைக்கப்பட்டு சாலை வெறிச்சோடி கிடந்த காட்சி.

முழு ஊரடங்கை மீறி வெளியில் சுற்றியவர்களுக்கு அபராதம்

Published On 2022-01-23 09:07 GMT   |   Update On 2022-01-23 09:07 GMT
ஆரணியில் முழு ஊரடங்கை மீறி வெளியில் சுற்றியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஆரணி:

முழு ஊரடங்கை யொட்டி ஆரணியில்   காந்தி ரோடு, எஸ்.எம். ரோடு உள்ளிட்ட முக்கிய வீதிகளில் கடைகள் அடைக்கபட்டதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

மேலும் ஆரணி டவுன் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் தலைமையில் போலீசார் பழைய பஸ்நிலையம் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டடனர்.

அப்போது தடையைமீறி சுற்றி திரியும் வாகன ஓட்டிகளின் வாகனத்தை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

பறிமுதல் செய்த வாகனங்களை அதன் உரிமையாளர்கள் தங்களின் ஆவணங்களை சமர்ப்பித்து நாளை வாகனங்களை திரும்பப் பெற்று கொள்ளலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
Tags:    

Similar News