உள்ளூர் செய்திகள்
பெற்ற மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே பெற்ற மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.
வேப்பனப்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே அத்திகுண்டா பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி. அவருக்கு 8 வயதில் மகள் உள்ளார்.
நேற்று வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் அவரது தந்தை பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் அவரது தந்தை தப்பி ஓடினார். தகவல் அறிந்து தாய் சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
இது குறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி, பாலியல் தொந்தரவு செய்த தந்தையை போலீசார் தேடி வருகிறார்கள்.