உள்ளூர் செய்திகள்
அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தரங்கம்பாடியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

Published On 2022-01-23 06:54 GMT   |   Update On 2022-01-23 06:54 GMT
தரங்கம்பாடியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தரங்கம்பாடி:

தரங்கம்பாடி தாலுக்கா அலுவலகம் முன்பு மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்காத தி.மு.க அரசை கண்டித்து அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

செம்பனார்கோவில் ஒன்றிய செயலாளர்கள் ஜனார்த்தனம், வி.ஜி.கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும்.

டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்களை திறந்திட வேண்டும், டாஸ்மாக் கடையை உடனே மூட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

இதில் பேரூராட்சி செயலாளர் கிருஷ்ணசாமி, பொதுக்குழு உறுப்பினர் கபடி பாண்டியன் ஆகியோர் கலந்துக்கொன்டனர்.

அதைபோல் மயிலாடுதுறையில் மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. 
ராதாகிருஷ்ணன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சந்தோஷ்குமார், முன்னாள் நகர செயலாளர் அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News