உள்ளூர் செய்திகள்
மீன்கள் வாங்கிய பொதுமக்கள்

நாளை முழு ஊரடங்கு எதிரொலி- கடலூர் துறைமுகத்தில் போட்டி போட்டு மீன்கள் வாங்கிய பொதுமக்கள்

Published On 2022-01-22 11:33 GMT   |   Update On 2022-01-22 11:33 GMT
கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் இன்று வழக்கத்தைவிட மீன்கள் வரத்து குறைந்து காணப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு மீன்களை வாங்கி சென்றனர்.
கடலூர்:

கொரோனா 3-வது அலை வேகமாக பரவிவரும் நிலையில் தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு வழிபாட்டுத்தலங்கள் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்படும், பஸ்கள், தியேட்டர்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு கடைகளுக்கு 50 சதவீத பொதுமக்கள் மட்டும் அனுமதிக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் தமிழக அரசு அறிவித்து உள்ளது.

மேலும் கடந்த 2 வாரம் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவித்த நிலையில் நாளை ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கையொட்டி கடந்த 2 வார சனிக்கிழமைகளில் கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் பிடித்து கொண்டுவந்த மீன்கள் வாங்க வியாபாரிகள் மற்றும் மக்கள் அதிக அளவில் திரண்டனர்.

அப்போது வழக்கம் போல் முக கவசம் அணியாமல் சமூக இடைவெளி பின்பற்றாமல் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மீன்களை போட்டி போட்டுக்கொண்டு வாங்கி சென்றனர்.

இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் நேற்று வரை 552 பேர் தொற்று பரவல் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று காலை எப்போதும் பரபரப்பாக காணப்படும் மீன்பிடி துறைமுகம் மக்களால் சூழ்ந்து காணப்பட்டது. ஆனால் இன்று வழக்கத்தைவிட மீன்கள் வரத்து குறைந்து காணப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு மீன்களை வாங்கி சென்றனர்.

மேலும் மீன்கள் வரத்து குறைந்து காணப்பட்டதால் காலை முதல் வழக்கத்தை விட சற்று பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கூட்டம் குறைந்து காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். இதில் சங்கரா ரூ. 350, வஞ்சரம் ரூ. 600, நண்டு ரூ. 500, இறால் 350 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டன.
Tags:    

Similar News