உள்ளூர் செய்திகள்
காஞ்சிபுரம் அருகே லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்: 2 பேர் பலி
காஞ்சிபுரம் அருகே லாரி-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை தேடி வருகிறார்.
காஞ்சிபுரம்:
சென்னை தாம்பரம் மோதிலால் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 36). இவருடைய உறவினர் தாம்பரம் திருவள்ளூவர் தெருவை சேர்ந்த அருளரசன் (27).
இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில், சென்னையில் இருந்து வேலூருக்கு உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்.
காஞ்சிபுரத்தை அடுத்த சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை சின்னயன்சத்திரம் அருகே செல்லும்போது எதிரே வேகமாக வந்த ஒரு லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து சதீஷ்குமார், அருளரசன் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்தரியில் அனுமதித்தனர். அங்கு சதீஷ்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அருளரசன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை தேடி வருகிறார்.
சென்னை தாம்பரம் மோதிலால் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 36). இவருடைய உறவினர் தாம்பரம் திருவள்ளூவர் தெருவை சேர்ந்த அருளரசன் (27).
இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில், சென்னையில் இருந்து வேலூருக்கு உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்.
காஞ்சிபுரத்தை அடுத்த சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை சின்னயன்சத்திரம் அருகே செல்லும்போது எதிரே வேகமாக வந்த ஒரு லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து சதீஷ்குமார், அருளரசன் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்தரியில் அனுமதித்தனர். அங்கு சதீஷ்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அருளரசன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை தேடி வருகிறார்.