உள்ளூர் செய்திகள்
.

கர்நாடக மதுபாட்டில்களை விற்ற பெண் கைது

Published On 2022-01-22 08:03 GMT   |   Update On 2022-01-22 08:03 GMT
ஓசூர் சிப்காட் பகுதியில் கர்நாடக மதுபாட்டில்களை விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் போலீசார் பேகேபள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு மறைவான பகுதியில், கர்நாடக மதுபானங்களை விற்ற பெண் ஒருவர் பிடிபட்டார். 

போலீசார் விசார ணையில், அவர் கோவிந்த அக்ரஹாரத்தை சேர்ந்த ஜெயேந்திரன் என்பவரது மனைவி நீலம்மா (வயது50) என்பது தெரியவந்தது.இதைதொடர்ந்து, நீலம்மாவை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து ரூ.2,686 மதிப்பிலான 48 கர்நாடக மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News