உள்ளூர் செய்திகள்
.

நிலத்தகராறில் மோதல் 4 பேர் மீது வழக்கு

Published On 2022-01-22 07:01 GMT   |   Update On 2022-01-22 07:01 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே நிலத்தகராறில் ஏற்பட்ட மோதலில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள கே.மோட்டூர் பகுதியை சேர்ந்த சண்முகம் (வயது45) என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த உறவினர்களான ரவி (34) ஆகிய இவர்களுக்கு நீண்ட நாட்களாக வழிதகராறு பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் இரு தரப்பை சேர்ந்தவர்களும்  கடந்த 18-ந்தேதி அன்று மீண்டும் வழி தகராறு காரணமாகி சண்டை போட்டு தாக்கி கொண்டுள்ளனர். 

இது குறித்து போச்சம்பள்ளி போலீசில் ரவி அளித்த புகாரின் பேரில் சண்முகம் (45), அவரது மகன் ராக்கேஷ் (22) வழக்குபதிவு செய்தும், அதே போல் சண்முகம் அளித்த புகாரின் பேரில் சங்கர் (31), ரவி (34) ஆகிய இரு தரப்பை சேர்ந்த 4 பேர் மீது வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News